அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

தேன்கனிக்கோட்டை, ஜூலை 24: அஞ்செட்டி அருகே பெல்லட்டி கோவைபள்ளம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் 35வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து தொலுவபெட்டா வன காப்பாளர் சதீஷ்குமார், அஞ்செட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சடலமாக கிடந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: