உடனடியாக தர்மராஜ் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து நாய்களை விரட்டியதோடு மானை பத்திரமாக மீட்டு பாதுகாப்புடன் வைத்துள்ளனர். இதுகுறித்து திருச்செந்தூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் மூலம் மானை காட்டு பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வருவாய் துறை மற்றும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பேய்குளத்திற்கு வந்த மானை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
The post சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் சுற்றித்திரிந்த மான் மீட்பு appeared first on Dinakaran.