திருக்கருகாவூரில் உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை

 

சீர்காழி, ஜூலை 23: சீர்காழி அருகே திருக்கருகாவூரில் உலக நன்மை வேண்டி விளக்கு புஜை நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருக்குருகாவூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயததில் ஆடி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு விவசாயம் செழிக்கவும், மழை பொழிவு வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது விநாயகர், துர்கை, மகாலட்சுமி தெய்வங்களுக்கு அர்ச்சனையும், தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி பாராயணமும் செய்து தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் அடங்கிய மங்கள பொருட்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிளக்கு பூஜையை தமிழ்நாடு விசுவஹிந்து பரிஷத் மண்டல செயலாளர் செந்தில்குமார் நடத்தி வைத்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சத்யா உதயகுமார் மற்றும் கிராம நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

The post திருக்கருகாவூரில் உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: