மதுபானம், குட்கா விற்ற 4பேர் கைது

ஊத்தங்கரை, ஜூலை 23: ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல்நிலைய போலீஸ் எஸ்ஐ நிர்மலா மற்றும் போலீசார், சிங்காரப்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த வடிவேல்(53), மிட்டப்பள்ளி அம்பேத்கர் நகரை சேர்ந்த சுதாகர்(54) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 8மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், இளவம்பட்டியில் குட்கா விற்ற அர்ஜூனன்(58), ஜெயராமன்(50) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 600 கிராம் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post மதுபானம், குட்கா விற்ற 4பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: