சகோதரர்களுக்குள் சொத்து தகராறு தாய், அண்ணன், அண்ணி, 3 குழந்தைகளை கொன்று எரித்த மாஜி ராணுவ வீரர்: அரியானாவில் பயங்கரம்

அம்பாலா: அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டம் நாராயண்கர் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பூஷன் குமார். இவர் தன் தாய் சரூபி தேவி(65), அண்ணன் ஹரீஷ் குமார்(35), அண்ணி சோனியா(32), மற்றும் அண்ணனின் குழந்தைகள் பாரி(7),யாஷிகா(5) மற்றும் மயங்க்(6), ஆகியோருடன் வசித்து வருகிறார். 2 ஏக்கர் நிலம் தொடர்பாக பூஷன் குமாருக்கும், அவரது அண்ணன் ஹரீஷ் குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றி உள்ளது. பின்னர் ஹரீஷ் குமார் உள்பட அனைவரும் தூங்கி விட்டனர். அப்போது ஆத்திரத்தில் இருந்த பூஷன் குமார், தன் தாய், அண்ணன், அண்ணி, 3 குழந்தைகள் உள்பட 6 பேரையும் கோடாரியால் கொடூரமாக வெட்டி கொன்றுள்ளார். பின்னர் 6 பேரின் உடல்களையும் எரித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து பூஷன் குமாரை தேடி வருகின்றனர்.

The post சகோதரர்களுக்குள் சொத்து தகராறு தாய், அண்ணன், அண்ணி, 3 குழந்தைகளை கொன்று எரித்த மாஜி ராணுவ வீரர்: அரியானாவில் பயங்கரம் appeared first on Dinakaran.

Related Stories: