மானாமதுரையில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்

சிவகங்கை, ஜூலை 22: மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை (ஜூலை 23) மானாமதுரையில் குறிப்பிட்ட கிராமங்களுக்கு நடைபெறவுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஊரக பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும வகையில் பயனுள்ள வகையில் ஜூலை 11 முதல் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முகாம்கள் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மானாமதுரை வட்டாரத்திற்குட்பட்ட மாங்குளம், தெற்குசாந்தனூர், தி.புதுக்கோட்டை, மேலநெட்டூர், மேலப்பிடாவூர், கீழப்பிடாவூர், மேலப்பசலை, கீழப்பசலை, எம்.கரிசல்குளம், சின்னக்கண்ணணூர்,

கீழமேல்குடி ஆகிய கிராமங்களுக்கு மானாமதுரை எம்எஸ்பிஏ உண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. திருப்பத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட திருவுடையார்பட்டி, காரையூர், நெடுமரம், கே.வைரவன்பட்டி, மணமேல்பட்டி, வன்னியன்காடு, இ.அம்மாபட்டி ஆகிய கிராமங்களுக்கு மணமேல்பட்டி சமுதாயக்கூடத்திலும் நடைபெற உள்ளது. முகாம்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறும். இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மானாமதுரையில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: