மின்வாரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு,ஜூலை21: ஈரோடு ஈவிஎன் சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு,அச்சங்கத்தின் தலைவர் குழந்தைசாமி தலைமை தாங்கினார். செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில உதவி செயலாளர் ஜோதிமணி பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில், ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முறைப்படுத்த வேண்டும். தேங்கியுள்ள மருத்துவ செலவீன தொகையை உடனே வழங்க வேண்டும்.மின் ஊழியர்களின் உரிமைக்கு உத்திரவாதம் அளிக்காத முத்தரப்பு ஒப்பந்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில், பொருளாளர் ராஜன், நிர்வாகி குப்புசாமி மற்றும் மின்வாரிய ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post மின்வாரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: