போலீசாருக்கான கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சி

நாமக்கல், ஜூலை 21:நாமக்கல் ஆயுதப்படை வளாகத்தில், போலீசாருக்கான கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்தார். டிஎஸ்பிக்கள் முருகேசன், இளங்கோவன் ஆகியோர் கலவரம் நடைபெறும் சூழலில் அவர்களை கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளித்தார். புகை குண்டுகள் மூலம் கலவர கும்பலை கலைப்பது குறித்தும் செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. துப்பாக்கிகளின் வகைகள், புல்லட்டுகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. காவல்நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகள், புல்லட்களின் பயன்பாடுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், நாமக்கல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல், புதுச்சத்திரம், நல்லிபாளையம், சேந்தமங்கலம், மோகனூர், எருமப்பட்டி, வாழவந்திநாடு ஆகிய காவல்நிலையங்களில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

The post போலீசாருக்கான கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: