பச்சமலையில் அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் ஆய்வு

 

துறையூர், ஜூலை 20: திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியிலுள்ள பச்சமலையில் ஜூலை 30, 31 ஆகிய இரண்டு தினங்கள் தங்கி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பணிகள் மேற்கொள்கிறார். இதையொட்டி பச்சமலையில் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிய தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பச்சமலைக்கு சென்றார்.

அமைச்சருடன் திருச்சி கலெக்டர் பிரதீப்குமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நி்ர்வாகிகள் உடன் சென்றனர். திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ள பச்சமலை சின்னஇலுப்பூரைச் சேர்ந்த மாணவி ரோகிணியை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

The post பச்சமலையில் அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: