எட்டயபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

எட்டயபுரம், ஜூலை 19: எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சாலைகள், தெருக்கள், நீர்வரத்து பகுதி மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் வருகிற ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லையெனில் பேரூராட்சி நிர்வாகமே ஆக்கிரமிப்புகளை அகற்றி அதற்குரிய செலவை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் வசூலிக்கும். எனவே ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், செயல் அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post எட்டயபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: