ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

 

பேராவூரணி, ஜூலை. 18: ரயிலில் அடிப்பட்டு அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பலியானார். வேளாங்கண்ணியிலிருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் நேற்றுமுன்தினம் இரவு 10.15 மணியளவில் பேராவூரணி ரயில் நிலையத்திலிருந்து சிறிதுதூரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை துண்டாகி பலியானார். தற்கொலை செய்துகொள்வதற்காக தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தாரா? அல்லது போதையில் தவறி விழுந்தாரா? என்ற விபரம் எதுவும் தெரியவில்லை. இறந்தவர் ஊதா கலர் அரக்கை சட்டை, சிமெண்ட் கலர் முழுக்கால் சட்டை அணிந்திருந்தார். அவர் யார் எந்த ஊர் என்ற விபரம் எதுவும் தெரியவில்லை.

இதுகுறித்து திருவாரூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடலை பிரேத ப‌ரிசோதனை‌க்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து தஞ்சாவூர் இருப்புப்பாதை காவல் இன்ஸ்பெக்டர் சாந்தி மேற்பார்வையில் திருவாரூர் இருப்புப் பாதை காவல் சப் இன்ஸ்பெக்டர் தண்டபாணி, பட்டுக்கோட்டை இருப்புப்பாதை புற காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், இளங்கோவன், திருவாரூர் தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வேழவேந்தன் ஆகியோர் விசாரிக்கின்றனர். இறந்தவர் பற்றிய தகவல் தெரிந்தால் திருவாரூர் இருப்புப்பாதை காவல்த்துறை 9498108982 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி திருவாரூர் இருப்புப்பாதை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: