நாகூர் ஆண்டவர் தர்காவில் உள்ள யாஹூசைன் பள்ளிவாசலில் மொஹரம் சிறப்பு பிரார்த்தனை

 

நாகப்பட்டினம், ஜூலை18: மொஹரம் பண்டிகை முன்னிட்டு புகழ் பெற்ற நாகூர் தர்காவில் உள்ள யாஹூசைன் பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக மொஹரம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் உள்ள யாஹூசைன் பள்ளிவாசலில் மொஹரம் பண்டிகை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நபிகள் நாயகம் பேரன் ஹஜ்ரத்இமாம்ஹூசைன் நினைவாக மர்ஷியா ஓதப்பட்டது. நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் செய்யது முகம்மது காஜி ஹுசைன் சாகிப் தலைமையில் விழா தொடங்கியது. பரம்பரை கலிபா சிறப்பு துவா ஓதினார். பொதுமக்களுக்கு இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. தர்கா கிழக்கு வாசலில் தொடங்கிய மர்ஷியா தர்கா ஆதினஸ்தனர்கள் கால்மாட்டு வாசல், நியூபஜார் சாலை, செய்யது பள்ளி தெரு, பீரோடும் தெரு வழியாக நாகூர் சில்லடி தர்காவை சென்றடைந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

The post நாகூர் ஆண்டவர் தர்காவில் உள்ள யாஹூசைன் பள்ளிவாசலில் மொஹரம் சிறப்பு பிரார்த்தனை appeared first on Dinakaran.

Related Stories: