ஐவிஎல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

அரூர், ஜூலை 12: திருப்பத்தூரில் பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற பொன் விழாவில், 2024-2025 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற ஐவிஎல் பள்ளியின் மாணவர், தாளாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. லிங்கண்ணன், சந்திரசேகர், மாயகிருஷ்ணன் ஆகியோர் பதவியேற்றனர். தர்மபுரி மாவட்டம், இருமத்தூரில் அமைந்துள்ள ஐவிஎல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம், 2ம் மற்றும் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்ததற்காக, பள்ளி தாளாளர் மற்றும் தலைவர் கோவிந்தராஜ், அரிமா சங்க மாநில தலைவர் ரத்தினசபாபதி, புவனேஸ்வரி, பூர்ணசந்திரன், மூத்த வழக்கறிஞர் மணியன், மணி, அமிர்தலிங்கம், நடராசன், தேவராஜன் ஆகியோர் விருது மற்றும் மரக்கன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

The post ஐவிஎல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: