மேலும் ‘நீட்’ நுழைவுத் தேர்வை நடத்திய தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘தேசிய, மாநில, நகரம், மையங்களின் அடிப்படையில் நீட் மதிப்பெண்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அதில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில் வழக்கமான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதில் யாருடைய தலையீடும் இல்லை. இதன்மூலம் நீட் தேர்வில் பெரும் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்பது உறுதியாகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது. இந்த மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்ற விசாரணை நடத்துகிறது. முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், நீட் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நீட் மறுதேர்வு நடத்த ஒன்றிய அரசு விரும்பவில்லை என்பது தெளிவாகி உள்ளது. மீண்டும் தேர்வு நடத்தினால், கடந்த மே 5ம் தேதி தேர்வெழுதிய சுமார் 24 லட்சம் மாணவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் நீட் போன்ற தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க, ஏழு பேர் கொண்ட நிபுணர் குழுவையும் ஒன்றிய அரசு அமைத்துள்ளது. அவர்கள் விரைவில் தங்களது பரிந்துரையை வழங்க உள்ளனர்.
The post உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் நிலையில் ஜூலை 3வது வாரத்தில் இளநிலை ‘நீட்’ கவுன்சிலிங்?: சென்னை ஐஐடி நடத்திய ஆய்வின் அடிப்படையில் முடிவு appeared first on Dinakaran.