பீகாரில் மற்றொரு பாலம் உடைந்து விழுந்தது

சஹர்சா: பீகாரில் கடந்த சில நாட்களாக சிவான், சரன், மதுபானி, அராரியா, கிழக்கு சம்பரான் மற்றும் கிஷான்கஞ்ச் உள்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்து வருகின்றன. இந்த சம்பவங்களை அடுத்து சுமார் 15 பொறியாளர்களை அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

கடந்த வாரம் முதல்வர் நிதிஷ்குமார், பழமையான பாலங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்நிலையில் சஹர்சா மாவட்டத்தில் உள்ள மகிசி கிராமத்தில் உள்ள பாலம் இடிந்து விழுந்தது. கடந்த 3 வாரங்களில் இடிந்து விழுந்த13வது பாலம் இதுவாகும்.

The post பீகாரில் மற்றொரு பாலம் உடைந்து விழுந்தது appeared first on Dinakaran.

Related Stories: