இடங்கண்ணி ஐவர்பாடி அய்யனார் கோயிலில் திருக்கல்யாணம்

தா.பழூர், ஜூலை 8: அரியலூர் மாவட்டம்,தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி கிராமத்தில் உள்ள ஐவர்பாடி அய்யனார் கோயிலில் திருக்கல்யாண பிரம்மோற்சவம் நேற்று நடைபெற்றது. இடங்கண்ணி கிராமத்தில் ஐவர்பாடி அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் பழுதடைந்ததால் ஊர் பொதுமக்கள் முக்கியஸ்தர்கள் கோயிலை திருப்பணி செய்ய முடிவு செய்து திருப்பணிகள் நடைபெற்றது. சென்ற ஆண்டு திருப்பணி முடிவுற்ற நிலையில் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பூரண, அருள்மிகு  புஷ்கலா சமேத ஐவர்பாடி அய்யனார் நல்ல சேவகமூர்த்தி சுவாமிக்கு இரண்டாம் ஆண்டு திருக்கல்யாணம் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்றது .
இதற்கு இடங்கண்ணி கிராம பொதுமக்கள் சார்பில் சீர்வரிசைகள் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்து திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணிய வாஜனம் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னர்  பூரண,  புஷ்கலா சமேத  ஐவர்பாடி அய்யனார் நால்வர் சேவக மூர்த்தி திருக்கல்யாண மகோத்ட்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மதியம் சந்தனகாப்பு அலங்காரத்துடன் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த திருக்கல்யாணத்தை முன்னிட்டு தா.பழூர், சிந்தாமணி, குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது.

The post இடங்கண்ணி ஐவர்பாடி அய்யனார் கோயிலில் திருக்கல்யாணம் appeared first on Dinakaran.

Related Stories: