தனியார் ஊழியரிடம் ₹15 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி, ஜூலை 8: கிருஷ்ணகிரி மகராஜகடை அருகே சிந்தகம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் குமார்(29), தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு, கடந்த மே மாதம் 5ம் தேதி, டெலிகிராமில் ஒரு குறுந்தகவல் வந்தது.

அதில், குறைந்த முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை நம்பி பல்வேறு தவணைகளில், ₹15,60,073 வரை, குமார் அனுப்பினார். ஆனால், பணத்தை அனுப்பிய பிறகு அதற்கான லாபமும், முதலீடு பணமும் கிடைக்கவில்லை. மேலும், அந்த குறுந்தகவல் வந்த செல்போன் நம்பரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமார், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிந்து, நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

The post தனியார் ஊழியரிடம் ₹15 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: