தொழில்நெறி விழிப்புணர்வு, திறன் மேம்பாட்டு வாரம்: நாளை தொடங்குகிறது

 

திருவள்ளூர், ஜூலை 8: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் அறிவுறுத்தலின் படி தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நாளை தொடங்கி ஒருவாரம் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதன்படி நாளை 9ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்காகவும், 10ம் தேதி மகளிருக்காகவும், 11ம் தேதி பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காகவும், 12ம் தேதி பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்காகவும், 15ம் தேதி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்காகவும் தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

எனவே மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடைபெறும் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வார நிகழ்ச்சிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

The post தொழில்நெறி விழிப்புணர்வு, திறன் மேம்பாட்டு வாரம்: நாளை தொடங்குகிறது appeared first on Dinakaran.

Related Stories: