இலங்கையில் அரசு ஊழியருக்கு இந்தாண்டு சம்பள உயர்வு இல்லை: அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்

கொழும்பு: அரசு ஊழியர்களுக்கு இந்தாண்டு சம்பள உயர்வு என்றும் சம்பள உயர்வு வழங்கினால் அரசுக்கு சிரமங்கள் ஏற்படும் என்று இலங்கை அதிபர் கூறினார். இலங்கை அதிபர் விக்ரமசிங்கே நேற்று கூறுகையில்,‘‘நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து இன்று நாம் மீண்டு வருகிறோம். கடந்த இரண்டு மூன்று வருடங்களில் பல பிரச்னைகளை எதிர்கொண்டோம். இப்போது படிப்படியாக பொருளாதாரத்தை சீரமைத்து வருகிறோம். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைகளையும் பெற்றுள்ளோம்.

இப்போது சிலர் சம்பள உயர்வு வேண்டும் என்கிறார்கள். இது கடினமானதாகும். ஆசிரியர்களுக்கு 2022 ல் சம்பள உயர்வை வழங்கியுள்ளோம். மேலும் 2024 ல் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. எனவே அந்தக் கோரிக்கைகள் நியாயமற்றவை. இந்த சம்பள உயர்வு செய்தால் கொடுக்க அரசாங்கத்திடம் பணம் இல்லை. அதனால் வாட் வரியை அதிகரிக்க வேண்டும். இப்போது வாட் 18% வரி வசூலிக்கப்படுகிறது. சம்பள உயர்வு வழங்க, மீண்டும் வரியை அதிகரிக்க வேண்டும். மக்களால் அதை தாங்க முடியாது. மேலும் 10 லட்சம் அரசு ஊழியர்களே நாட்டில் இருக்க வேண்டும். இப்போது 15 லட்சம் பேர் உள்ளனர். இதனால், இந்த ஆண்டு அவர்களுக்கு சம்பள உயர்வை வழங்க முடியாது. சம்பள உயர்வு வழங்கினால் சிரமம் ஏற்படும்’’ என்றார்.

The post இலங்கையில் அரசு ஊழியருக்கு இந்தாண்டு சம்பள உயர்வு இல்லை: அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல் appeared first on Dinakaran.

Related Stories: