பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு புதுச்சேரியில் தொடங்கியது

புதுச்சேரி: பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு புதுச்சேரியில் தொடங்கியது. ஆசிய நாடுகளின் தொகுதிக்கான வாக்குப்பதிவு புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் நடைபெறுகிறது. பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் முதல் சுற்றுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. முதல் சுற்றுத் தேர்தலில் வலதுசாரி கூட்டணி 33.4%, இடதுசாரி கூட்டணி 27.9 % வாக்குகளைப் பெற்றன. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் மையவாத கூட்டணி 20.7% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

The post பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு புதுச்சேரியில் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: