டூவீலரில் கஞ்சா கடத்தியவர் கைது

தர்மபுரி, ஜூலை 4: மாரண்டஅள்ளி சாலையில், மாரண்டஅள்ளி போலீஸ் எஸ்ஐ சீனிவாசன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் டூவீலரில் வந்தவர் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, பாலக்கோடு திருமல்வாடியை சேர்ந்த சின்னசாமி மகன் மாது(46) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 1200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலரில் கஞ்சா கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: