பவுர்ணமியை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இன்று காலை அனைத்து பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி 500 ரூபாய்க்கும், கனகாம்பரம் ரூ.800, ஜாதி மல்லி மற்றும் முல்லை ரூ.400, அரளி ரூ.180, சாமந்தி 260க்கும், சம்பங்கி 120க்கும், பன்னீர் ரோஸ் 100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ”கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் அனைத்து பூக்களின் விலை குறைவாக இருந்தது. இன்று பவுர்ணமி என்பதால் மீண்டும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்” என்றார்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் பவுர்ணமியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு appeared first on Dinakaran.