இதுதொடர்பாக கனகபாண்டியன் அளித்த புகாரின்பேரில் அன்னவாசல் போலீசார், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் கவிநாரிபட்டியை சேர்ந்த சங்கர் மற்றும் லாரி உரிமையாளரான அதிமுக ஓட்டுநர் அணி நிர்வாகி சுந்தரம் ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சங்கரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சுந்தரத்தை தேடி வந்த நிலையில் பரம்பூர் அடுத்துள்ள சொக்கம்பட்டியில் நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் அவரை இலுப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்பேரில் புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.
The post ஆர்டிஓவை கொல்ல முயன்ற வழக்கு; அதிமுக நிர்வாகி சிறையிலடைப்பு appeared first on Dinakaran.