சென்னையில் தினசரி காலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 45 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் வரும் 2025ம் ஆண்டுக்குள் எதிர்கால பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தலா 6 பெட்டிகளுடன் கூடிய ரூ.2,2820 கோடியில் 28 புதிய ரயில்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில், அதிகரித்து வரும் தேவையை திறம்பட கையாளவும் பயணிகளுக்கு வசதியான பயண அனுபவத்தை வழங்கவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னையில் 2025ம் ஆண்டுக்குள் ரூ.2,820 கோடியில் 6 பெட்டிகளுடன் கூடிய 28 புதிய மெட்ரோ ரயில்கள் வாங்க திட்டம்!! appeared first on Dinakaran.