நீண்டகால விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பின் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்! மேற்கண்ட அறிவிப்பால், விவசாயிகளுக்கு மட்டுமின்றி கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், உள்ளிட்டவைகளை தூர்வாரும் நடைமுறை எளிமையாகும், விவசாயிகளின் தேவையான பயன்பாட்டிற்கு மண்ணும் எடுத்துக்கொள்ளலாம். மண் எடுப்பதால், நீர்த்தேக்கங்கள் யாவும் மேற்கண்ட செயல்முறையில் எளிதாக தூர்வாரப்படும் சூழல் உருவாகும். இது ஒன்றையொன்று சார்ந்த ஆக்கப்பூர்வமான செயல்பாடு! தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த சிறப்பான அறிவிப்பால், விவசாயிகள் பயன்பெறுவதோடு, நாட்டில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை உயர்த்தி அதிக மழைநீரைச் சேமித்திடவும், மண்வளம் காக்கவும் வழிவகை செய்யும்.
The post விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்க அனுமதித்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கருணாஸ் நன்றி appeared first on Dinakaran.