திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில், மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளிப் பேருந்தில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென இன்ஜினில் தீ பற்றிய நிலையில், உடனடியாக மாணவர்கள் கீழே இறக்கி விடப்படட்டனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.