அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூரில் நடிகர் ரவி கிஷன் (பாஜ), மிர்சாபூரில் அப்னா தளம் கட்சி தலைவரும், ஒன்றிய அமைச்சருமான அனுப்ரியா படேல், சண்டவுலியில் ஒன்றிய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே (பாஜ), பீகார் மாநிலம் பாட்னா சாஹிப்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் (பாஜ), பாடலிபுத்ராவில் லாலு மகளான மிசா பார்தி (ஆர்ஜேடி), இமாச்சல் பிரதேசம் காங்க்ராவில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆனந்த் சர்மா (காங்கிரஸ்), மண்டியில் நடிகை கங்கனா ரணாவத் (பாஜக), அவரை எதிர்த்து மாநில அமைச்சர் விக்ரமாதித்ய சிங் (காங்கிரஸ்), ஹமிர்பூரில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் (பாஜ),பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இலங்கை, அமெரிக்காவிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் தரண்ஜித் சிங் சந்து (பாஜ), ஜலந்தரில் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி (காங்கிரஸ்), பத்திண்டாவில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் (சிரோன்மணி), பாட்டியாலாவில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர் (பாஜ), மேற்குவங்க மாநிலம் டயமண்ட் ஹார்பரில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி (திரிணாமுல்), ஜார்கண்ட் மாநிலம் தும்காவில் முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மருமகள் சீதா சோரன் (பாஜ), சண்டிகரில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மணீஷ் திவாரி (காங்கிரஸ்) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். கடைசி கட்ட தேர்தல் நடக்கும் 57 மக்களவை தொகுதியுடன், ஒடிசாவில் உள்ள 41 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு நாளை பிரசாரம் ஓய்வதால், தேர்தல் ஆணையமும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
The post பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி உள்பட 57 தொகுதியில் நாளை பிரசாரம் ஓய்கிறது: ஜூன் 1ல் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு appeared first on Dinakaran.