புகார் அளித்ததன் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் சிறுவன் குறித்து விசாரணை மேற்க்கொண்டு வந்தனர். இந்நிலையில் அருகில் உள்ள கிணற்றில் சிறுவன் தவறி விழுந்து இருக்கலாம் என்ற கோணத்தில் நேற்று முன்தினம் தீயணைப்பு வீரர்கள் மூலம் அதே பகுதியில் உள்ள கிணற்றில் இறங்கி இரவு முழுவதும் தேடினர். பின்னர் நேற்று சந்தேகத்தின் பேரில் அதே பகுதியில் உள்ள விக்கிரமாதித்தன் என்பவரது விவசாய கிணற்றில் கணினி தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கேமராவை பயன்படுத்திசோதனை செய்தனர்.
இதில் அந்த சிறுவனது உடல் இருப்பது தெரியவந்தது. பின்னர் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேர போராட்டதிற்கு பிறகு சிறுவனின் உடலை மீட்டனர். காணாமல் போன 7 வயது சிறுவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post தியாகதுருகம் அருகே மாயமான 7 வயது சிறுவன் விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.