ஆனிப்பெருந்திருவிழா பணிகளை துவக்க நெல்லையப்பர் கோயிலில் விநாயகர் விழா கொடியேற்றம்

 

நெல்லை, மே27: நெல்லையப்பர் கோயிலில் ஆனித்தேரோட்ட திருவிழா முன்னேற்பாடு பணிகளை துவக்க விநாயகர் விழா கொடி ஏற்றம் நேற்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தென் மாவட்டங்களில் உள்ள சிவாலயங்களில் பிரசித்தி பெற்றது நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆனிப்பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு அணித்திருவிழா முன்னேற்பாடுபணிகளை துவங்க விநாயகர் விழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. இதைத்தொடர்ந்து தேரோட்ட திருவிழா அழைப்பிதழ் அச்சிடும் பணி நடைபெறும். தொடர்ந்து நெல்லையப்பர் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் ஜூன் 13ம் தேதி நடக்கிறது. தொடர்ந்து 9ம் நாளான ஜூன் 21ம் தேதி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற உள்ளது.

 

The post ஆனிப்பெருந்திருவிழா பணிகளை துவக்க நெல்லையப்பர் கோயிலில் விநாயகர் விழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: