அவர்களிடம் இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த மரண வாக்குமுல கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி அரசியல் பிரமுகர்கள், கடன் கொடுத்தவர்கள், கடன் பெற்றவர்கள் ஆகியோர் சிபிசிஐடி நெல்லை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சிபிசிஐடி எஸ்பி முத்தரசி கடந்த இரு நாட்களாக நெல்லையில் முகாமிட்டு விசாரணையை முடுக்கிவிட்டு கண்காணித்து வந்தார். சிபிசிஐடி போலீசார் இரு குழுக்களாக பிரிந்து, ஒரு குழுவினர் திசையன்விளை, உவரி, குட்டம் ஆகிய பகுதிகளிலும், மற்றொரு குழுவினர் ஜெயக்குமாரின் உறவினர்கள், நண்பர்களிடமும் விசாரித்த வருகின்றனர்.
The post நெல்லை காங். தலைவர் மரண வாக்குமூலம் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்ப முடிவு appeared first on Dinakaran.