×

பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை

தேன்கனிக்கோட்டை, மே 18: தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி மரியாளம் பக்கமுள்ள சி.ராசிபுரத்தை சேர்ந்தவர் கண்ணியப்பன் மகன் அரவிந்த் (19). இவருக்கு அதே பகுதியை ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்தது. இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர், அரவிந்த் வீட்டிற்கு சென்று இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கன்னியப்பன், தனது மகன் அரவிந்தனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அரவிந்த், கடந்த 16ம் தேதி தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி அரவிந்த் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Kanniyappan ,Arvind ,C.Rasipuram ,Anchetty Marialam ,
× RELATED தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் உரசி யானை உயிரிழப்பு