அதன்படி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடந்த மார்ச் 1ம் தேதி சென்னையில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு விறுவிறுப்பாக நடந்தது.
இந்நிலையில் இதுவரை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 623, அரசு நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 61,142, அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 23,370, அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் 25,119 பேர் என மொத்தம் 3 லட்சத்து 24,884 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும் போது 5 லட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post அரசு பள்ளிகளில் இதுவரை 3.25 லட்சம் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.