டெல்லி: மோடிக்கு பதில் பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பியதன் முலம் ஆணையம் நடுநிலைமையாக செயல்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது என்று காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தை பா.ஜ.க.வின் பி டீமாக மாற்றிவிட்டார்கள். மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு தைரியம் இல்லை என்று அவர் கூறினார்.