இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, VVPAT இயந்திர செயல்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். வாக்குகள் பதிவாவதற்கும், எண்ணப்படுவதற்கும் வித்தியாசம் இல்லை என்றும் தேர்தல் விதிமுறைகள் எந்த அடிப்படை உரிமையையும் மீறவில்லை என்பதால் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியது. 2 நாட்கள் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்ற நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதன் மூலம் நீதிபதிகள் சில உத்தரவுகளை பிறப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவை இன்று பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.