இந்நிலையில், இந்தாண்டு சித்ரா பவுர்ணமி நாளை வருகிறது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களில் 7 பேர் உயிரிழந்த நிலையில் பக்தர்களுக்கான அறிவுரைகளை வனத்துறை வெளியிட்டுள்ளது. வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாகவே செல்ல வேண்டும். முழு உடல் பரிசோதனை செய்தபிறகே மலையேற வேண்டும். வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும்; மாற்றுப் பாதையில் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தி வருகிறது.
The post வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்: வனத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.