இந்தியா கூட்டணிக்கு அமோக வெற்றி: அமைச்சர் பொன்முடி உறுதி


விழுப்புரம்: விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தனது குடும்பத்தினருடன் இன்று காலை தனது வாக்குப்பதிவினை செலுத்தினார். விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள 18வது வார்டுக்குட்பட்ட 146வது வாக்குச்சாவடியில் எம்ஆர்ஐசி நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சவாடியில் இன்று காலை 8 மணி அளவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம சிகாமணி, அவரது சகோதரர் அசோக் சிகாமணி ஆகியோர் அவர்களது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தனர்.

அதன்பின்பு செய்தியாளர்களிடம் பொன்முடி கூறுகையில்: இந்தியா முழுவதும் 2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த முயற்சியால் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். தமிழக முதல்வரின் கனவு திட்டங்கள் நிறைவேறும் என கூறினார்.

The post இந்தியா கூட்டணிக்கு அமோக வெற்றி: அமைச்சர் பொன்முடி உறுதி appeared first on Dinakaran.

Related Stories: