230 வாக்கு மையங்களில் கேமரா பொருத்தி கண்காணிப்பு

திருவாடானை, ஏப்.18: திருவாடானை சட்டமன்ற பகுதியைச் சேர்ந்த 230 வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆயிரம் வாக்காளர்களுக்கு அதிகமான வாக்குச்சாவடிகளிலும், பதட்டமான வாக்கு சாவடிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதட்டமான 59 வாக்குச்சாவடிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளும் சேர்த்து 230 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி பொதுமக்கள் பயமின்றியும், முறைகேடின்றி வாக்களிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

The post 230 வாக்கு மையங்களில் கேமரா பொருத்தி கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: