×

சலூன் கடைக்காரரை தாக்கிய வாலிபர் கைது

சேலம், ஏப்.17: சேலத்தை அடுத்துள்ள வீராணம் டி.பெருமாபாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (34). இவர், அந்த பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். கடந்த 14ம் தேதி நேற்று இரவு 8.30 மணியளவில் கடையை பூட்டும் பணியில் கதிர்வேல் ஈடுபட்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர், குடிபோதையில் வந்து தனக்கு உடனடியாக முடி வெட்டி விட வேண்டும் எனக்கூறி கதிர்வேலிடம் தகராறு செய்துள்ளார். தற்போது கடையை பூட்டிவிட்டு செல்ல இருப்பதால், நாளை காலையில் வரும்படி அந்த வாலிபரிடம் கதிர்வேல் கூறியுள்ளார். ஆனால், தனக்கு உடனே முடிவெட்ட வேண்டும் எனக்கூறி அவரை சரமாரியாக தாக்கினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து தகராறை விலக்கிவிட்டனர். இதில், கதிர்வேல் காயமடைந்தார். இதுபற்றி வீராணம் போலீசில் கதிர்வேல் புகார் கொடுத்தார். எஸ்ஐ சக்தி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில், கதிர்வேலை தாக்கியது டி.பெருமாபாளையம் அர்ஜூனன் தெருவை சேர்ந்த சோனா (எ) நட்ராஜ் (23) எனத்தெரியவந்தது. அவர் மீது கடைக்காரரை தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது என்பது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர், நட்ராஜை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சலூன் கடைக்காரரை தாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Kathirvel ,Veeranam T. Perumapalayam ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...