இதேபோல் செஞ்சி அருகே நெகனூர், ஈச்சூர், அம்மாகுளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆதரவு திரட்டினார். அப்போது பிரதமர் மோடி ஒட்டுமொத்த விவசாயிகளின் விரோதியாக செயல்படுவதாக விமர்சித்தார். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வரவு உள்ளிட்ட எந்தவித வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றச்சாட்டினார். பெரும் மழை, வெள்ளத்தால் தமிழ்நாடு தத்தளித்த போது வராத பிரதமர் மோடி வாக்குகாக தற்போது அடிக்கடி தமிழ்நாடு வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் விமர்சித்தார்.
The post பிரதமர் மோடி குன்னக்குடிக்கே அன்னக்காவடி எடுத்தாலும் தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கமுடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சனம் appeared first on Dinakaran.