நாளை ரம்ஜான் பண்டிகை நடைபெறுவதை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஆடு சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தது. ஒரு ஆட்டின் விலை ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரையில் விற்பனையானது. அதிகாலை முதல் நடைபெற்று வந்த இந்த ஆடு சந்தையில் இதுவரை ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தேர்தல் நடத்த விதிமுறைகள் உள்ளதால் ஆடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் பணம் எடுத்து வர முடியாத சூழ்நிலையில் கடந்த ஆண்டை விட குறைந்த அளவிலான ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடுகளை வாங்கிச் செல்வதற்கு மினி டெம்போ, லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை எடுத்து வந்ததால் உளுந்தூர்பேட்டை சேலம் நெடுஞ்சாலையில் அதிகாலை முதல் போக்குவரத்து நெரிசலோடு காணப்பட்டது.
The post ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.