இது குறித்து விலங்குகள் ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘கூடலூர், முதுமலை சத்தியமங்கலம் வனப் பகுதி யானைகள் இக்கால கட்டத்தில் இடம் பெயர்ந்து கர்நாடக வனப் பகுதியில் கபினி மற்றும் நாகர்ஹோலே வரை சென்று விடுவதும் கேரள பகுதி யானைகள் கூடலூர் மற்றும் முதுமலை பகுதிக்கு வருவதும் வாடிக்கை. மே மற்றும் ஜூன் மாதங்களில் பருவ மழை துவங்கிய பின் கேரள வனப் பகுதியில் இருந்து வந்த யானைகள் மீண்டும் திரும்பிச் செல்லும்.
அதே நேரத்தில் கர்நாடக மாநிலம் கபினி பகுதிக்கு சென்ற யானைகள் முதுமலை, பந்திப்பூர் வனப் பகுதிகளுக்கு திரும்பும். இந்த இடப்பெயர்வு நிகழ்வு ஒவ்வொரு வருடமும் ஏற்படும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நிகழும்’’ என்றார்.
The post முதுமலைக்கு இடம் பெயர்ந்துள்ள கேரள காட்டு யானைகள் கூட்டம் appeared first on Dinakaran.