பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு

 

கும்பகோணம், ஏப்.6: கும்பகோணம் அருகே பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் அனைத்து வாக்காளர்களும் விடுதல் இன்றி வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி, பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வழுத்தூர் வருவாய் கிராமம், முஸ்லிம் தெரு பகுதிகளில் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் 100% விடுதலின்றி வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாபநாசம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலும், பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் முன்னிலையிலும், வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று தேர்தல் அழைப்பிதழ்கள் வழங்கியும், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தும், வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில் வருவாய் ஆய்வாளர் ரெஜிலா தேவி, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர் கலந்து கொண்டனர்.

 

The post பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: