குளித்தலை பெரியார் பாலம் அருகே ரூ.1.05 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகை பறிமுதல்

 

குளித்தலை, ஏப்.5: குளித்தலை பெரியார் பாலம் அருகே ரூ.1.05 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகையை நிலையான கண்காணிப்பு குழுவினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கான நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் குளித்தலை முசிறி பெரியார் பாலம் அருகில் வாகன சோதனையில் மேற்படி வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது பள்ளப்பட்டியிலிருந்து முசிறி நோக்கி சென்று கொண்டிருந்த வேன் வாகனத்தை சோதனை மேற்கொண்ட போது , பள்ளப்பட்டி சேர்ந்த அராபத் அலி என்பவரிடம் சுமார் ரூ.1,05,680/- மதிப்புள்ள கவரிங் நகை இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. இந்த நகைகுரிய சரியான ஆவணம் ஏதும் சமர்ப்பிக்காததால், மேற்படி நகையினை நிலையான கண்காணிப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி இடம் ஒப்படைக்கப்பட்டு, பாதுகாப்புக்காக குளித்தலை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

The post குளித்தலை பெரியார் பாலம் அருகே ரூ.1.05 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகை பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: