ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்களர்களுக்கு கொடுக்க ரூ. பல கோடி சேலைகளை குடோனில் பதுக்கியுள்ளார். இதனை ஈரோடு போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் தற்போதுவரை அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈரோடு அதிமுக வேட்பாளர் வங்கிகளில் 250 போலி கணக்குகளை ஆரம்பித்து வைத்துள்ளார். அந்த கணக்குகள் மூலம், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. எனவே ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வேட்பாளரை கைது செய்ய வேண்டும்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கூடுதல் சம்பளம் வழங்குவதாக தேர்தல் ஆணையத்தின் அனுமதியின் பேரில் அறிவித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்பு வெளியிடுவது அயோக்கியத்தனம். எனவே தேர்தல் ஆணையம் பிரதமர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post மோடியின் கொத்தடிமையாக செயல்படும் தேர்தல் ஆணையம்: ஈவிகேஎஸ் இளங்கோவன் காட்டம் appeared first on Dinakaran.