×

தென்சென்னையின் ரயில்வே துறை சார்ந்த தேவைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துள்ளேன்: தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி

சென்னை: தென்சென்னையின் ரயில்வே துறை சார்ந்த தேவைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துள்ளேன் என தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறினார். தியாகராயர் நகரில், 142வது வட்டத்திற்கு உட்பட்ட சி.ஐ.டி நகரில், போக் சாலை, சாதூல்லா ரோடு, வ.உ.சி தெரு, மேட்லி தெரு, காமராஜர் காலனி, பர்கிட் ரோடு, மன்னார் தெரு, தாமோதரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், மாவட்டச் செயலாளர் மயிலை வேலு எம்.எல்.ஏ, தலைமையில் வாக்கு சேகரித்தார்.

அப்போது நிருபர்களிடம் தமிழச்சி தங்கபாண்டியன் கூறியதாவது : கடந்த மூன்று நாட்களாக வாக்கு சேகரித்து வருகிறேன். செல்கின்ற இடமெல்லாம் பொதுமக்களும், கழகத்தினரும், தோழமைக் கட்சியினரரும் அளிக்கும் வரவேற்பையும், அன்பையும், எழுச்சியையும் பார்கின்ற போது, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி.

நீங்கள் ரயில்வே துறையில் தொகுதிக்காக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறுகிறார்களே என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு, தொகுதி முழுவதும் உள்ள ரயில்வே துறை சார்ந்த பிரச்சனைகளுக்காக நான் 2019ல் வெற்றி பெற்றது முதல் 2024வரை அவ்வபோது ஆய்வு மேற்கொண்டு தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு குறைகளை மனுவாக அளித்துள்ளேன். ZRUCC கூட்டம் அனைத்திலும் கலந்துகொண்டு, தொகுதிக்குட்பட்ட அனைத்து‌ ரயில்வே துறை சார்ந்த பிரச்சனைகளுக்காக பேசியுள்ளேன்.

அதன் விளைவாக மாம்பலம், சைதாப்பேட்டை ரயில் நிலையங்களில் பழுதடைந்த மேற்கூரை மாற்றப்பட்டது, தரமணி ரயில் நிலைய சாலையில் ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் 100க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர் முண்டக்கன்னியம்மன் கோவில் ரயில் நிலையத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நுழைவு வாயில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. வேளச்சேரி – புனித தோமையர் மலை இணைப்பிற்காக, பாராளுமன்றத்தில் பலமுறை பேசியும், ரயில்வே அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை விடுத்ததன் காரணமாக, நிலம் கையகப்படுத்துதல் முடிக்கப்பட்டு, பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் குறித்தும் பல முறை நாடாளுமன்றத்தில் குரல்‌ கொடுத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். எனத் தெரிவித்தார்.

பரப்புரையில் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, பகுதிச் செயலாளர் ஏழுமலை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்‌ ராஜா அன்பழகன், திமுக நிர்வாகிகள், தோழமைக் கட்சியினர் கலந்துகொண்டனர்.

The post தென்சென்னையின் ரயில்வே துறை சார்ந்த தேவைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துள்ளேன்: தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tensenna ,Tamizachi Tangabandian ,CHENNAI ,SOUTH ,DIMUKA ,TAMIZACHI TANGAPPANDIAN ,THIAGARAYAR CITY, C. ,142ND CIRCLE ,D City, Bok Road, Chadulla Road, Va. U. C Street ,Dinakaran ,
× RELATED தென்சென்னை மீனவ குடும்பங்களை...