×

காதல் ஜோடிகள் போலீசில் தஞ்சம்

மோகனூர், மார்ச் 28: மோகனூரை அடுத்த வளையப்பட்டியைச் சேர்ந்தவர் மாது(28). அதே பகுதியைச் சேர்ந்தவர் ப்ரீத்தி(19). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு ப்ரீத்தியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரித்தனர். இதனைடுத்து, காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு, மோகனூர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதனையறிந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனில் குவிந்தனர்.

அப்போது இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதே போல, என்.புதுப்பட்டி மேலப்பட்டி பொக்லைன் ஆபரேட்டர் நித்தீஸ்குமார் (26). அதே பகுதியை சேர்ந்த மோகனா (19) காதல் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போலீசார் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

The post காதல் ஜோடிகள் போலீசில் தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Mohanur ,Mathu ,Preethi ,Preeti ,
× RELATED மோகனூர் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை