மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி 36 மீனவர்களில் 33 பேரை மட்டும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் படகோட்டிகள் இருவருக்கு தலா 6 மாத சிறைத்தண்டனை, இரண்டாம் முறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழக மீனவர்களும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட 33 மீனவர்களும் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகோட்டிகளுக்கு கடும் தண்டனைகள் தொடர்ந்து விதிக்கப்படுவது மீனவ மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 5 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் சமீபத்தில் சிறை தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 3 மீனவர்களுக்கு சிறை தண்டனை: 33 பேர் விடுதலை appeared first on Dinakaran.