வேட்புமனுவுடன் மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கக் கோரிய மனு : தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை : தேர்தலில் போட்டியிடுவோர் வேட்புமனுவுடன் மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். 30 நாட்களுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அறிவுறுத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, வேட்பாளர்களின் உடல்நிலை பரிசோதனை அறிக்கை என்பது சம்பந்தப்பட்டோரின் தனிப்பட்ட அந்தரங்க விஷயம் என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

The post வேட்புமனுவுடன் மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கக் கோரிய மனு : தீர்ப்பு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: