சொத்து, தொழில் வரி வசூல் மையங்கள் 29 முதல் 31ம் தேதி வரை விடுமுறை நாளிலும் இயங்கும்: ஆணையர் தகவல்

சென்னை: சென்னையில், சொத்துவரி, தொழில் வரி செலுத்தும் அலுவலகங்கள் வரும் 29ம் தேதி முதல் 31ம்தேதி வரை பொது விடுமுறை நாட்களிலும் இயங்கும் என்று ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமக்களின் நலன் கருதி சொத்துவரி, தொழில் வரி மற்றும் நிறுமவரி செலுத்துவதற்காகவும், தொழில் உரிமம் புதுப்பித்தலுக்காகவும் சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை 29ம் தேதி (வெள்ளிக்கிழமை), 30ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 31ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய பொது விடுமுறை நாட்களில் இயங்கும். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post சொத்து, தொழில் வரி வசூல் மையங்கள் 29 முதல் 31ம் தேதி வரை விடுமுறை நாளிலும் இயங்கும்: ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: