தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப் பூர்வமாக விளக்கம் பெறப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் கூறினார். அத்துடன் வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக வாக்குப்பதிவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சிகள் உரிய ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். வாக்குப்பதிவு தினத்தன்று தனியார் நிறுவனங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தொழிலாளர் நலத்துறை ஆணையம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் எந்த பிரச்னையும் இல்லாமல் தேர்தலை நடத்த முடிகிறது. தேசிய சராசரியைவிட தமிழகத்தில் வாக்களிக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது; வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும்; 27 லட்சம் புதிய வாக்காளர் அட்டைகள் வழங்கப்படவுள்ளன” இவ்வாறு குறிப்பிட்டார்.
The post தேசிய சராசரியைவிட தமிழகத்தில் வாக்களிக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது :தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தகவல் appeared first on Dinakaran.